பச்சரிசி புட்டு செய்முறை | வீட்டில் தயாரித்த அரிசி மாவு பயன்படுத்தி | படிப்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். கேரளாவின் பாரம்பரிய காலை உணவுகளில் ஒன்று. புட்டு வழக்கமாக வாழைப்பழம், அப்பளம் அல்லது கடலை கறியுடன் பரிமாறப்படுகிறது. வீட்டில் அரைத்த அரிசி மாவுடன் செய்யப்படும் புட்டு மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.
கேரளாவில் பிடித்த காலை உணவில் புட்டு ஒன்றாகும். இது செய்ய மிகவும் எளிதானது. இப்போதெல்லாம் எல்லா கடைகளிலும் புட்டு மாவு பயன்படுத்த தயாராக வாங்கலாம். பச்சரி, மட்டா, கப்பா, ரவா, கோதுமை போன்ற பல புட்டு வகைகள் உள்ளன….
வீட்டில் தயாரித்த அரிசி மாவு பயன்படுத்தி பச்சரிசி புட்டு செய்வது எப்படி?
பச்சரிசி புட்டு செய்முறை | வீட்டில் தயாரித்த அரிசி மாவு பயன்படுத்தி | படிப்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். அனைவராலும் விரும்பப்படும் ஒரு பொதுவான செய்முறை. இந்த செய்முறையை தயாரிக்க நான் இங்கே ஒரு சிரட்டா புட்டு அச்சு பயன்படுத்துகிறேன். பச்சரிசியை 3 முதல் 5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். முதலில் ஊறவைத்த அரிசியே நன்றாக வடிகட்டி நன்றாக அரைக்கவும். கூடுதல் சுவைக்காக, சமைப்பதற்கு முன் சில துருவிய தேங்காயைச் மாவில் சேர்த்து கலக்கலாம் (விரும்பினால் மட்டும் செய்யவும்). மேலும், அச்சுக்குள் நிரப்பும்போது அரிசி மாவை அமுத்தி நிரப்ப வேண்டாம்.
பொதுவாக பல கேரள காலை உணவுகளை தயாரிக்க அரிசி மாவு பயன்படுத்தப்படுகிறது. இந்த நாட்களில் நாம் கடைகளில் இருந்து அரிசி மாவு பெறுகிறோம். கடையில் வாங்கும் மாவு நல்லாதான் இருக்கும், ஆனால் சில சமயங்களில் நாங்கள் எங்கள் சொந்த விருப்பத்துக்கேற்ப புட்டு மாவே தயார் செய்து சேமிக்கிறோம்.
மேலும் எங்கள் காலை உணவு செய்முறை மற்றும் கோதுமை புட்டு செய்முறையே செய்முறைகளே பார்க்கவும். நீங்கள் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்.
பச்சரிசி புட்டு செய்முறை
Course: காலை உணவு, முதன்மைCuisine: இந்தியன்Difficulty: சுலபம்2
சர்விங்ஸ்5
நிமிடங்கள்10
நிமிடங்கள்3
hours15
நிமிடங்கள்பச்சரிசி புட்டு செய்முறை | வீட்டில் தயாரித்த அரிசி மாவு பயன்படுத்தி | படிப்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். கேரளாவின் பாரம்பரிய காலை உணவுகளில் ஒன்று.
தேவையான பொருட்கள்
1 கப் பச்சரிசி
ஊறவைப்பதற்கான தண்ணீர்
1/4 தேக்கரண்டி உப்பு
4 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய்
செய்முறை :
- அரிசியை ஊறவைத்தல்
- ஒரு பாத்திரத்தில் 1 கப் பச்சரிசியே எடுத்துக் கொள்ளுங்கள். அரிசியை 2 முதல் 3 முறை சுத்தம் செய்து கழுவவும்.
- சுத்தம் செய்யப்பட்ட அரிசியை 3 முதல் 5 மணி வரை 2 முதல் 3 கப் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- அரைப்பதற்கு
- ஊறவைத்ததும் அரிசியை தண்ணீரில் இருந்து வடிகட்டி நடுத்தர அளவிலான மிக்சி ஜாடிக்கு மாற்றவும்.
- தேவையான அல்லது 1/4 தேக்கரண்டி உப்பு சேர்த்து சில முறை பல்சு மோடில் அரைக்கவும். பின்னர், ஒரு நிமிடம் நோர்மல் மோடில் அரைக்கவும்.
- இப்போது, அரைத்த அரிசி மாவை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- புட்டு மாவு தயாராக உள்ளது .
- பச்சரிசி புட்டு தயாரித்தல்
- அரைத்த அரிசி மாவில் 2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த படி விருப்பமானால் மட்டும் செய்யவும்.
- புட்டு அச்சு நிரப்ப ஆரம்பிக்கலாம். இங்கே ஒரு செரட்டா புட்டு அச்சை பயன்படுத்துகிறோம். நீங்கள் எந்த வகையான அச்சையும் பயன்படுத்தலாம். முதல் அடுக்கு தேங்காயை (1 டேபிள் ஸ்பூன்) அச்சின் அடிப்பகுதியில் வைக்கவும்.
- கவனமாகவும் மெதுவாகவும் அரிசி மாவை அடுத்த அடுக்காக சேர்த்து பின்னர் அச்சை மூடவும். நிரப்பும் போது அரிசி மாவு அழுத்தி நிரப்ப வேண்டாம்.
- ஒரு குக்கரில் 2 முதல் 3 கப் தண்ணீரை முன்கூட்டியே சூடாக்கி, ஆவி வந்ததும் இந்த அச்சுகளை குக்கர் விசில் வென்ட் மீது வைக்கவும்.
- மொத்தத்தில்10 நிமிடங்கள் வேக வைக்கவும். (புட்டு அச்சின் துளைகளிலிருந்து நீராவி வெளியே வர ஆரம்பித்ததும் தீயை நடுத்தரமாகக் குறைத்து 5 முதல் 7 நிமிடங்கள் சமைக்கவும்.)
- பின்னர் அச்சில் இருந்து அகற்றி, கடலை கறி, பாசிப்பருப்பு கறி அல்லது உங்களுக்கு விருப்பமான எந்த கறியையும் சேர்த்து, மென்மையான சூடான புட்டு பரிமாறவும். எங்கள் குடும்பத்தின் மிகவும் விருப்பமான தேர்வு சர்க்கரை மற்றும் வாழைப்பழம் தான்.
செய்முறை விளக்க வீடியோ
குறிப்புகள்
- அரிசியை 3 முதல் 5 மணி வரை 2 முதல் 3 கப் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- மேலும், அச்சுக்குள் நிரப்பும்போது அரிசி மாவை அமுத்தி நிரப்ப வேண்டாம்.